பக்கங்கள்

புதன், 25 ஏப்ரல், 2007

இட ஒதுக்கீடு - அரசியல் சுயநலங்களும், குமுகாய நலன்களும்

இவ்விடயம் குறித்து தமிழ் வலையுலகில் ஏற்கனவே பலரும் எழுதிவிட்டார்கள். குழலி இத்தகைய இடுகைகளின் தொகுப்பு ஒன்றை ஒரு தனி இடுகையாகவே இட்டிருக்கிறார். ஜெகத்தும் தன் பொல்லாச் சிறகை வழமைபோல் அருமையான இடுகையொன்றின் மூலம், இவ்விசயத்தில், விரித்துள்ளார்.

நேற்று CNN IBN தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் தனது கூட்டணிக்கட்சிகளிடமிருந்து இடஒதுக்கீடு விசயத்தில் மிகுந்த நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். தமிழக முதல்வரும் நேற்று பலகோடிப்பேரின் வாழ்க்கையை ஒரிருவர் தீர்மானிப்பது சரியானதல்ல என்ற ரீதியில் இடைக்கால்த் தடை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக நாசுக்கான கருத்தைக் கூறியுள்ளார். பேராயக்கட்சியும், பிற கட்சிகளும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஓட்டுகளைப்பெற இடஓதுக்கீடு விசயத்தில் சுயநலமாகச் செயல்படுவதாக பலர் வாதிடலாம். எனினும், தற்போதைக்கு, இவ்விசயத்தில் அரசியல்வாதிகளின் சுயநலங்களும், குமுகாயத்தின் பொதுநலனில் முடிவது வரவேற்கத்தக்கதுதானே!?

1 கருத்து: