பக்கங்கள்

விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 டிசம்பர், 2005

சச்சின் டெண்டுல்கரும் அவதூறும்?!

பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சச்சின் மேல் ஒரு ஆதங்கம் / கோபம் உண்டு. அதாவது, அவர் இந்தியா இக்கட்டான நேரங்களில் இருக்கும் போது சரியாக விளையாடுவதில்லை. ஒருதின ஆட்டங்களிலும், டெஸ்ட் போட்டிகளிலும், நம் அணி சேஸ் செய்யும்போது விரைவில் ஆட்டமிழந்து விடுவார். நாம் முதலில் மட்டை பிடிக்கும் போதோ அல்லது டெஸ்ட் போட்டிகளின் முதல் இன்னிங்ஸில் மட்டுமே அதிக ரன் சேர்ப்பார்; நெருக்கடி நேரங்களில் கைவிட்டு விடுவார். ஆனால் மற்ற வீரர்கள் லாரா, காலிஸ், இன்சமாம், திராவிட் ஆகியோர் நெருக்கடி நேரங்களிலேயே நன்றாக விளையாடுகிறார்கள் என்ற எண்ணம் பரவலாக உண்டு. சில நாட்களுக்கு முன்பு தமிழ்மணத்திலேயே ஒருவர் இத்தகைய பதிவினை எழுதியிமிருக்கிறார். ஆனால் இது எந்தளவிற்கு உண்மை? இன்றைய cricinfo வலைத்தளத்தில் இது குறித்து புள்ளியியல் தரவுகளின் அடிப்படையில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. படித்துப் பாருங்கள். ஆனால் கட்டுரையாளர் ஏன் 2002 லிருந்து இன்று வரை நடைபெற்ற ஆட்டங்களை மட்டுமே தன் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டுள்ளார் என்பதுதான் தெரியவில்லை.

செவ்வாய், 22 நவம்பர், 2005

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அலட்சியம் / அறிவீனம்

இன்று (22/11/2005) சென்னையில் நடைபெறவிருந்த இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவ மழைக்காலம்; இம்மாதங்களில் எந்த நாளிலும் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் தொடர்ந்து கடந்த மூன்று முறைகளாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் சென்னையில் கிரிக்கெட் ஆட்டங்களை நடத்த ஏற்பாடு செய்து, அது பின்னர் மழையால் ரத்து செய்யப்படுவது கேலிக்கூத்து. எத்தனையோ ஆட்டங்கள் சென்னயைத்தவிர இந்தியாவின் பிற நகரங்களில் மற்ற 10 மாதங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்றையேனும் சென்னையில் நடத்தாமல் மிகச் சரியாக இந்த இரு மாதங்களில் போட்டி நடத்த ஏற்பாடு செய்வது வாரியத்தின் அலட்சியமா அல்லது அறிவீனமா. (நல்ல பட்டிமன்ற தலைப்பு!!!)