பக்கங்கள்

செவ்வாய், 6 மார்ச், 2007

பாலபாரதிக்கு விஷேசம்!!!!! - பா.க.ச பதிவு

இதனால் சகல பாகச உறுப்பினர்களுக்கும் அறிவிப்பது என்னவெண்றால், தமிழ் வலைப்பதிவுலகின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரும் (சிரிக்காதீங்க, நெசமாத்தான்), பா.க.ச வின் மூலவருமான 'தல' பாலபாரதிக்கு, மூக்காணாங்கயிறு கட்டப்படலாம் என்று நம்பப்படுகிறது...

மேற்படி வைபவத்தை ராமேஸ்வரத்தில் நடத்துவதா அல்லது சென்னையில் கொண்டாடுவதா என்பது குறித்து 'தல' இந்தவாரம் தன் ஊருக்குச் சென்று வந்தபின்பு முடிவெடுப்பார்.

மேலும், தன் வாழ்க்கையில் நடக்கப்போகும் இந்த முக்கியமான நிகழ்ச்சியைக் கருத்திற்கொண்டு, அனைத்து பாகச உறுப்பினர்களுக்கும் 'தல' சென்னையில் ' கொலசாமி படையல்' வைப்பதற்கும் முடிவெடுத்திருப்பதாகப் பட்சியொன்று என் காதில் ஓதிச் சென்றது.

குறிப்பு: விரைவில் 'தல' யின் இதுவரை வெளிவராத பராக்கிரமங்கள் குறித்த இடுகைகளைக் காண தொடர்ந்து புளியமரம வாருங்கள். (புளியமரம் - உசத்தி கண்ணா! உசத்தி!!)

பின் குறிப்பு: ‘தல’ ஊருக்கு இந்தவாரம் செல்கிறேன் என்று சாதாரணமாகச் சொன்னவுடன், ஆயிரம் வாட்ஸ் பிரகாசமான என் மூளை இதைவைத்து ஒரு பாகச பதிவு போட்டுவிடலாம் என எண்ணியதால் வந்தது இப்பதிவு. இது முற்றிலும் என் கற்பனையே.

3 கருத்துகள்:

  1. தங்கவேலு அண்ணே ! நீங்க பாட்டுக்கு கற்பனைன்னு கடைசியாய் சொல்லிபுட்டிங்க, திருச்சிகாரனுங்க அருவாளோட கெளம்பிட்டானுங்களாம் மொத நாலு வரிய படிச்சிபுட்டு

    பதிலளிநீக்கு
  2. இதை வெச்சு கூட பதிவு போடலாமா. ம்ம்ம் எத்தன பின்னூட்டம் உழப்போவுதோ

    பதிலளிநீக்கு
  3. //விரைவில் 'தல' யின் இதுவரை வெளிவராத பராக்கிரமங்கள் குறித்த இடுகைகளைக் காண//

    பாத்துய்யா...விஷேசத்துக்கு வேட்டு வெச்சிட போகுது...

    பதிலளிநீக்கு