பக்கங்கள்

ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

கள்ளம்



என்னுடன் கல்லூரியில் படித்த நண்பனொருவன் தன் ஊரிலிருந்து பேருந்தில் வரும்போது முன்னால் இருந்த அழகான பெண்ணிடம் கை போட்டதாகவும், அவளும் அதற்கு இசைந்து கொடுத்தாள் என்று சொன்னான். அவை போன்ற பல ‘கதைகளை’ அவன் சொல்வதுண்டு. அவையாவும் அவனது கற்பனை என்றும் எந்தப் பெண்ணும் இப்படியெல்லாம் எளிதில் இசைந்துகொடுப்பவர் அல்ல என்பதையும் ஒரளவிற்கு யதார்த்தம் உணர்ந்தவர் புரிந்துகொள்வர்.  தன்னால் இயலாததை இப்படி சிலர் வெளிப்படையாக சொல்லி தன் ஆற்றாமையை தீர்த்துக்கொள்வார்கள் என்பதை அப்போதே புரிந்துகொண்டேன். இது நடந்து 25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்று கள்ளம் நாவலை படித்தபோது அவன் ஞாபகம் தான் வந்தது. தஞ்சை பிரகாஷ் தனது ஆற்றாமையை பரந்தாம ராஜு என்ற கதாபாத்திரத்தின் மூலம் நாவல் என்ற பெயரில் எழுதி வெளியிட்டிருக்கிறார் போல. 

நாவலை படித்துமுடித்தவுடன் என்னை அறியாமலேயே சே எனச் சற்று சத்தமாக சொல்லிவிட்டேன். எனது நேரத்தை வீணடித்துவிட்டேனே என்ற ஆதங்கத்தில். 100 பக்கங்களுக்கு பின் பிரகாஷ் என்னதான் சொல்ல வருகிறார் என்று அறிய பக்கங்களை புரட்டவேண்டியதாகிவிட்டது. காமமே பேசு பொருளாக இருந்தாலும் அதைத்தாண்டி அதில் ஒன்றுமே இல்லை. அதுவும் மூன்றாம் தரமாகத் தான் இருக்கிறது. 

தஞ்சை அரண்மனை பகுதிகள், தஞ்சாவூர் ஓவியங்களை வரையும் மரபு கொண்டவர்கள் என பிரகாஷ் குறிப்பிடும் ராஜூக்கள் பற்றிய சில விவரணைகள் முதலில் படிக்கத் தூண்டினாலும் பிற்பாடு மிகு செயற்கையாக அவர் சித்தரிக்கும் பாலியல் உறவுகள் அவர் அதை மீறி ஏதும் சொல்ல விழையவில்லை என்பதை எளிதில் உணர்த்திவிடுகிறது.  முன்பு எப்போதோ கமல் ஒரு பேட்டியில், எப்படி சார் தினமும் செக்ஸ் வைத்துக்கொள்வீர்கள் என தன்னிடம் ஒருவர் கேட்டதாகச் சொல்வார். பிரகாஷும் கிட்டத்தட்ட கமலிடம் அக்கேள்வியைக் கேட்ட மனிதரை நினைவூட்டுபவராகவே தெரிந்தார். கள்ளத்தில் அவர் சித்தரிக்கும் பாலியல் உறவுகளும் புளு பிலிம் படங்களின் செயற்கையான காட்சிகளையே நினைவூட்டின. சிறிதும் நம்பகத்தன்மையற்ற, அதிர்ச்சி மதிப்பீட்டிற்கோ அல்லது தனது ஆற்றாமையை வெளிப்படுத்த மட்டுமே எழுதப்பட்டதாகவே கள்ளம் உள்ளது. 

தன் தந்தை படைப்பது கலையே அல்ல, ஆனால் அசல் கலைஞனான தன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று பல இடங்களில் பரந்தாம ராஜூ சொல்கிறான. ஆனால் அவன் கலைஞன் என்பதற்கான போதுமான தடயங்களை பிரகாஷ் கள்ளத்தில் வைக்கவில்லை. அவர் சொல்லும் கலை அவர் பாலியல் சித்தரிப்பை போல் விடலைத்தனமாகவேயுள்ளது. ரஜினி படங்களில் வருவது போல சற்றென வெள்ளைக்காரர்கள் புகழ்பவனாக சில காட்சிகளிலேயே பரந்தாம ராஜு மாறிவிடுகிறான். அவன் கலைஞன் என்பதால் அவனைப் பார்க்கும் எல்லாப் பெண்களும் அவனை கூடுகிறார்கள், அவன் அப்பாவின் ஆசை நாயகி உட்பட. அவ்வாறே இருப்பதில் தவறில்லை. ஆனால் அத்தகையவற்றை கலாபூர்வமாக்கும் ஏதோ ஒன்று பிரகாஷிடம் ஒரு மாற்று குறைவாகவேயுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது. அல்லது அவர் நோக்கமே அதுவல்லாமலிருக்கலாம். நாவலின் தொடக்கத்தில் பரந்தாமராஜூ பாபியை முதலில் பார்த்தவுடன் வர்ணிப்பதிலேயே (இடுப்பே இல்லை...., இல்லாத இடுப்பிற்கு மேலான அந்தப் பகுதி அவனை அச்சுறுதியது ) பிரகாஷின் நோக்கம் வெறும் பாலியல் கவர்ச்சியை சொல்வது மட்டுமே என்பதை நாவல் உணர்த்திவிடுகிறது. 

தஞ்சை பிரகாஷ் கதைகள் குறித்து இணையத்தில் அவர் இறந்தபிறகு வரும் வியாக்கியானங்கள், அவரது பாலியல் சித்தரிப்புகள் குறித்த தத்துவங்கள் யாவும் போலிகள் என்பதே கள்ளம் படித்தபின் எனக்கேற்பட்ட மனப்பதிவு. கள்ளம் என் நாவல் பட்டியலில் இல்லவேயில்லை. ஜெயமோகன் பிரகாஷின் எழுத்தை (அவரது பிற மேதமைகளை உணர்த்தியபின்) முதிரா பாலியல் எழுத்து என்று வகைப்படுத்தியிருப்பார். ஆயினும் ஒரே ஒரு காரணத்திற்காகவே கள்ளம் வாங்கினேன். இலக்கியவட்டம் நாராயணன் அவர்கள் தான் காஞ்சிபுரத்தில் இலக்கிய வட்டம் ஆரம்பித்ததற்கு தஞ்சை பிரகாஷுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமென்று சொல்லியிருக்கிறார். அவர் தஞ்சையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வேலை மாறுதலால் வந்தவர். அதனால் இந்த வருடம் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்நாவலை வாங்கினேன். பிரகாஷின் அதிர்ச்சி மதிப்பீடு தெரியும் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல்தான் கள்ளம் படிக்க ஆரம்பித்தேன். நல்லவேளை பிரகாஷ் என்னை ஏமாற்றவில்லை. ஜெயமோகனின் அறுவை சிகிச்சை கத்திக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

புதன், 5 பிப்ரவரி, 2014

ஜோ டி குரூஸூக்கு பாராட்டுவிழா

சென்ற சனிக்கிழமை நெய்தல் படைப்பாளிகள் சார்பாக நண்பர் சிறில் அலெக்ஸ் முன்னின்று சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸுக்கு பாராட்டுவிழாவை சென்னை லயோலா கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தார். தமிழக முன்னாள் டி.ஜி.பி அலெக்ஸாண்டர், இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், வறீதையா கான்ஸ்டாண்டின், ஜஸ்டின் திவாகர், டாக்டர் ரெக்ஸ் ஆகியோருடன் ஜோ டி குரூஸும் விழாவில் பேசுவார்கள் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பெயர் குறிப்பிட்டவர்களோடு வேறு பலரும் அன்று பேசினர்.

முதலில் அலெக்சாண்டர் தலைமையுரை ஆற்றினார். பணியிலிருந்த காலங்களில் தனக்கு இலக்கிய புத்தகங்களைப் படிக்க நேரமிருந்ததில்லையெனினும் மீனவர்களை பற்றி எழுதப்பட்டிருப்பதால் ஆழி சூழ் உலகு, கொற்கை ஆகியவற்றை வாங்கியதாகவும் கூறினார்.  மீனவ சமுதாயத்தைச் சார்ந்தவன் ஆயினும் தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் பிறந்து வளர்ந்தவன் ஆதலால் கடலைப் பற்றியோ, அதைச் சாரந்திருப்பவர்கள்  பற்றியோ தனக்கு அதிகம் தெரியாது என்றார். கொற்கையில் பனிமயமாதா தேவாலயத்தில் கூடியிருக்கும்  மனிதர்களில் ஒருவராக வரும் ராஜரத்தினம்  என்பவர் தனக்கு மிகவும் நெருங்கிய உறவினர் என்றும் அதற்காகவே அதை சிலாகித்து படித்ததாகவும் பேசினார்.  அலைந்து திரிந்து சேகரித்த தகவல்களை ஒருமைப்படுத்தி இத்தகைய நாவல் ஒன்றை எழுதிய ஜோவின் மேதமையை வாழ்த்தி  அமர்ந்தார். 

டாக்டர் ரெக்ஸ், ஒரு காலத்தில் மாலைநேர தேநீருடன் உண்பதற்காக கொழும்பிலிருந்து பிஸ்கெட் வரவழைப்போம் என அவரது அம்மா சொல்வதுண்டு என்றும் அவ்வாறு செல்வச் செழிப்பில் திகழ்ந்த மீனவ சமுதாயம் இப்போது வறிய நிலையை அடைந்துவிட்டதாக கூறினார். ஜஸ்டின் திவாகர், நெய்தல் படைப்பாளிகளை ஒருங்கிணைத்து அவரும் வறிதையாவும் நாகர்கோவிலில் நடத்திவரும் அமைப்பு குறித்து கூறினார். பின்னர் வறிதையா கான்ஸ்டாண்டின் அரசியல் கோணத்தில் உணர்சிகரமான உரை நிகழ்த்தினார் - வலம்புரி ஜான் மீனவர் என்றாலும் அந்த அடையாளத்தை மறைத்துக்கொண்டு தான் எழுதினார் என்றார். ராஜம் கிருஷ்ணன் மீனவர்களோடு தங்கியிருந்து நாவல் எழுதினாலும் அது முழுமையாக மீனவர்கள் வாழ்க்கையை சொல்லிவிடவில்லை என்றும், கடல்புரத்தில் எழுதிய வண்ணநிலவன் மீன் பரவர்களை மீன் பறையர்கள் என வேண்டுமென்றே எழுதியதாகக் கூறினார். இதைச் சொல்லும்போது அந்த சாதியை (பறையர்) தான் குறைத்து சொல்லவில்லை என்பதையும் தெளிவாக்கினார். ஆயினும் சாதியை வேண்டுமென்றே வண்ணநிலவன் மாற்றி எழுதியிருப்பதை, அவர்மேல் மதிப்பு இருந்தாலும், கண்டிப்பதாகக் கூறினார். தாம் ஆண்ட பரம்பரை என்பது போன்ற மேட்டிமைத் தனங்களை விட்டுவிட்டு பரதவ சமுதாயங்கள், (பரவர், முக்குவர் இன்னபிற), அனைத்தும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டிய காலமிது எனக்குறிப்பிட்டார். இவர்கள் அனைவரும் கொற்கைக்கு கிடைத்த விருது நம் சமுதாயத்திற்குக் கிடைத்த விருது என்ற கண்ணோட்டத்திலேயே பேசினர்.

பின்னர் ஜோவுக்கு ஒருவர் வந்து பட்டம் (தலைப்பாக) கட்டினார். அதன் தாத்பர்யம் என்ன என விளக்குமாறு அவரிடம் சொல்லப்பட்டது. மைக்கைப் பிடித்த அவர் நமது தாழ்ச்சிக்கு கத்தோலிக்கம் தான்  காரணம் என ஒரே போடாய்ப்போட்டார்.  நெற்றிக் குங்குமம் விபச்சாரிகள் தான் வைப்பார்கள் என பாதிரியார்கள் சொன்னதால்தான் நம் பெண்டிர் அதை தவிர்த்தனர். இவ்வாறு நாம் நம் மரபிலிலிருந்து துண்டிக்கப் பட்டோம் என அதிரடியாக கருத்து சொல்ல ஆரம்பித்தார். அலெக்சாண்டர், பட்டம் கட்டுவது குறித்து உம்மை கருத்து சொல்ல சொன்னால் தேவையில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறேரே என்றார். அதற்கு அவர், பட்டம் ஏன் கட்டுகிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்ச் சொன்னார். அப்படின்னா, முதலில் ஓடிப்போய் உக்காரும் என முன்னாள் டி.ஜி.பி. சிரித்துக்கொண்டே சொன்னார். பின்னர் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த மீனவ தலைவர்கள் ஜோவுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். இடிந்தகரையிலிருந்து வந்திருந்த ஒருவர் முன்னர் பேசியவரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து பேசினார். கத்தோலிக்க மதத்தால் நமக்கு விளைந்த நன்மைகளும் உள்ளன எனச்சொன்னார். பொது இடத்தில் இவ்வாறு தடாலடியாக பேசக்கூடாது என அவரை கண்டித்தார். 


பின்னர் ஜெயமோகன் தெளிவான கச்சிதமான உரையாற்றினார். கடல் திரைப்படம் தோல்வி அடைந்ததற்கு அது தமிழ்ச் சமூகத்துடன் ஒட்டாத கலாச்சாரத்தை பிரதிபலித்ததே காரணம் என தமிழின் முண்ணனி பத்திரிக்கைகள் சில எழுதியதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கான காரணத்தையும் சொன்னார். வரலாறு என்பது நடப்பதல்ல; நடந்ததாக எழுதிவைக்கப்பட்டதுதான் வரலாறாக முடியும், தமிழ்ப்பண்பாடு என்று நம்மை உணரவைப்பது பல காலகட்டங்களில் எழுதப்பட்டவைகளின் தொகுப்பே என்றார். எனவே மீனவ சமுதாயங்களின் பண்பாடு என்பதை நீங்கள்தான் எழுதவேண்டும் என்றார். அவ்வாறு எழுதி வரலாறாக்கப்ட்ட பின் அது தமிழ்பபண்பாட்டோடு ஐக்கியமாகிவிடும் என்றார். உதாரணமாக ஜெயகாந்தன் கடலூர்க்காரராக இருந்திருந்தாலும் அவர் அவ்வூரைப் பற்றி எழுதவில்லை. ஆகவே நடுநாட்டின் பண்பாட்டை அறிய நாம் கண்மணி குணசேகரன் வரும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது என்றார். முன்பு கொல்லங்கோடு கடற்கரையில் மீனவர்கள் மீன்படிக்க செல்லும்போது செம்மீன் படத்தில் சலீல் சவுத்திரி இசையமைத்த பாட்டை பாடிக்கொண்டு செல்வதை தான் பார்த்திருக்கிறேன் என்றார். கோழிக்கோட்டிலிருந்து தூத்துக்குடி வரை மீனவர்களின் பாடலாக ஒரு பெங்காலி இசையமைத்த பாடலே கோலோச்சியது. காரணம் அம்மீனவர்களிலிருந்து அவர்களின் பண்பாட்டைப் பற்றிய பிரபலமான பாடலாசிரியரோ, இசையமைப்பாளரோ இல்லாமல் வெற்றிடமாய் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் சங்க இலக்கியத்திலேயே நெய்தல் திணை பற்றிய வர்ணனைகள் சிறப்பாக இல்லை. ஏனென்றால் அப்பாடல்களை இயற்றியவர்களில் பெரும்போலோர் மருத நிலத்தைச் சார்ந்த கிழார்கள் என்றார். இத்தகைய இரண்டாயிர வருட பின்புலத்தில் ஜோ டீ குரூஸின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர் தமிழிலக்கியத்திற்கு முற்றிலும் புதிய அத்தியாயத்தை எழுதிச் சேர்த்து நெய்தலை அதன் உண்மையான வகையில் பிரதிநிதப்படுத்துவதாக கூறினார். ஜோவின் தொடக்கமே மிகச் சிறப்பாக அமைந்தது என்றும், கவிதை எழுத வந்த அவரை ஆழி சூழ் உலகு எழுத வைத்த ‘தமிழினி’ வசந்த குமாரின் பங்கை குறிப்பிடத்தக்கது என்றும் சொன்னார். ஒரு மீனவன் மட்டுமே எழுதியிருக்கக் கூடிய கடலைப் பற்றியும், மீனகளைப் பற்றியுமான அபாரமான வர்ணனைகள் ஜோ வின் நூற்களில் உள்ளதாகக் குறிப்பிட்டார். உதாரணமாக, ஆழி சூழ் உலகில் உள்ள சுறா வேட்டை வர்ணனை, ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும்’ நாவலில் வரும் சுறா வேட்டையை விட மிகச் சிறப்பான ஒன்று எனக் குறிப்பிட்டார். அதேபோல் மகாபாரத்தில் மீன்களைப் பற்றிய வர்ணனைகள் நல்ல கவித்துவத்தோடு உள்ளது. அவைகளைத் தொகுத்தால் அது மட்டுமே 400 பக்கங்களுக்கு வரும், ஏனெனில், வியாசர் சத்தியவதி என்ற மீனவப் பெண்ணிற்கு மகனாக யமுனை நதித் தீவில் பிறந்தவர் என்றார்.

சாகித்ய அகாடமி விருது கிடைத்தவுடன் முதல் பாராட்டு விழா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மூலம் நடத்தலாம் என ஜோவைத் தொடர்புகொண்டபோது முதலில் தயக்கத்துடனேயே ஒத்துக்கொண்ட அவர் பின்னர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் - பல சீனியர்கள் இருக்கும்போது தனக்கு கிடைத்த இவ்விருதை தனக்கான தனிப்பட்ட அங்கீகாரமாகக் கருதாமல் தனது சமூகத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுவதாகவும், எனவே தனக்கு விழா எதுவும் எடுக்கவேண்டாம் என ஜோ கூறியதாக ஜெயமோகன் சொன்னார். ஆயினும் ஆழி சூழ் உலகோ, கொற்கையோ மீனவ ச்முதாயத்தை மட்டுமே முன்னிறுத்தவில்லை. அவை தமிழ்ப்பண்பாட்டையே முன்னிறுத்துகின்றன. அவைகள் தமிழ்ப்பண்பாடு என்ற நூலில் ஒரு அத்தியாயம் மட்டுமே என்றார். இதுபோன்ற பல அத்தியாயங்கள் சேர்ந்தே தமிழ்ப்பண்பாடு என்ற நூல் உருவாக்கப்படுகிறது என்ற இலக்கிய, பண்பாட்டு வரலாற்றுணர்வை தான் முன்னிறுத்துவதாக்க் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய அருள் எழிலன் பரதவர்கள் ஆண்ட குலம் என்ற மேட்டிமைத்தனங்களை விட்டுவிட்டு நமது தற்போதைய நிலை குறித்து கவனம் கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் இந்திரா பார்த்தசாரதி தான் அகடாமி விருதுக் குழுவில் ஜூரியாக இருந்ததால் தனக்கு இவ்விழாவில் கலந்துகொள்ள முதலில் தயக்கம் இருந்தது என்றார். பொதுவாக அகாடமி விருதுகளை ஒரு சமூகமே கொண்டாடி தான் பார்த்ததில்லை என்றும், இவ்விழா தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். கொற்கை ஒரு வகையில் தால்ஸ்தாயின் போரும் அமைதியும் நாவலை தனக்கு ஞாபகப்படுத்துவதாகக் கூறினார். போரும் அமைதியும் ஒரு நாவலோ, வரலாறோ அல்ல என்றும் அது ஒரு ஆவணம் என்றும் தால்ஸ்தாய் சொன்னது கொற்கைக்கும் பொருந்தும் எனவும் சொன்னார். கடைசியாக ஜோ ஏற்புரை வழங்கினார். அதிகம் அவர் பேசவில்லை. தனக்கு இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என மிரட்டல்கள் வந்ததாகக் குறிப்பிட்ட அவர் ‘என்ன பாவம் செய்தேன், என் ஜனமே, நான் என்ன பாவம் செய்தேன்’ என்று தொடங்கும் பாடலை அவரது கணீர்க்குரலில் பாடிவிட்டு அமர்ந்தார். இறுதியில் சிறிலின் நன்றியுறையுடன் விழா இனிதே முடிவுற்றது.

மேலும் படங்கள்

புதன், 1 ஜனவரி, 2014

புத்தாண்டில்...

இன்று எனது இயல்புக்கு மாறான புத்தாண்டு. நான் இன்று மகிழ்ச்சியாய் இருக்கிறேன். ஏனெனில் நான் புத்தாண்டு கொண்டாடத்தை அருவெருப்பவன். ஆகையினால் புத்தாண்டு நாட்களில் அந்த கொண்டாட்டங்களுக்கு எதிர்வினையாக வேண்டுமென்றே உருவாக்கிக்கொண்ட ஒரு எதிர்மறை உணர்வில் இருப்பேன். அதனால் முந்தைய புத்தாண்டுகளில் இவ்வளவு உற்சாசமாக இருந்ததில்லை என்றே நினைக்கிறேன். இன்றும் புத்தாண்டை பலரும் கொண்டாடும் வழக்கமான பாணியில் கொண்டாடவில்லை. நேற்றிரவு 12 மணிக்கு முன்பே தூங்கப் போய்விட்டேன். ஆனால், நேற்று மாலை நானும் பவானியும் எங்கள் குடும்ப வாழ்க்கையில் செய்யவேண்டியன குறித்து பேசிக்கொண்டோம். இதில் எங்கள் இருவரின் தொழிலில் செய்யவேண்டியன குறித்த இலட்சியங்களும் அடங்கும். எங்களுக்கு டிசம்பர் 31 புத்தாண்டைவிட முக்கியமான நாளும் கூட. ஏனெனில், 13 ஆண்டுகளுக்கு முந்தைய டிசம்பர் 31 அன்றுதான் நாங்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவது குறித்த முடிவை எடுத்தோம்.

இன்று காலை எழுந்தவுடன் நேற்று பேசியவற்றை ஒரு தாளில் குறித்துக்கொண்டேன். 41 வயதைக் கடந்துவிட்டேன். இன்னும் எனது இலட்சியங்களில் பெரும்பாலனவற்றை நான் அடையவில்லை. இன்னும் பத்தாண்டுகளில் நான் அவற்றை அடையவில்லையென்றால் மீதியிருக்கும் எனது வாழ்நாள் மிக துன்பகரமாக இருக்கும் என்றே உணருகிறேன். ஏனெனில் எனது கனவுகளை நான் அடையாதது குறித்த கவலைகள் என்னை அப்போது தினமும் வருத்தும். அவற்றை அடைவதற்கான உடல் வலுவோ, மனத்திடமோ அப்போது இராது. மேலும் 10 ஆண்டுகளில் இரண்டு மகன்களும் வளர்ந்துவிடுவார்கள். ஆகவே இந்த 10 ஆண்டுகளே எனக்கான இலட்சியங்களை அடைய தகுந்தவை. இந்த மனநிலை கடந்த சில மாதங்களாகவே இருந்தாலும் நேற்று பவானியுடன் பேசியபின் தான் திட்டவட்ட வடிவை அடைந்தன. ஆகவே எனது இலட்சியங்களை அடைய புத்தாண்டு என்பது ஒரு உத்தேச தொடக்கம் மட்டும்தான்.

உண்மையில் 1988 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தின் ஒரு மழைநாளில்தான் நான் எனது திறமைகளை உணர்ந்தநாள். அப்போது நான் பிளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தேன். முந்தைய 10 ஆம் வகுப்பு பரீட்சையில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண். மாநிலத்தில் முதல் நாற்பது மாணவர்களில் ஒருவன். இதற்காக நான் பெரிதாக எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை. சொல்லப்போனால் பரீட்சை நாட்களில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். நன்றாக ஞாபகமிருக்கிறது, அன்று பெருமழை பெய்து பணகுடி அனுமன் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. வெள்ளத்தை ஆற்றின் கரையில் நடந்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தபோது நான் மட்டும் முயற்சி செய்திருந்தால் மாநிலத்தில் எளிதாக முதல் மதிப்பெண் பெற்றிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. பிளஸ் டூவில் அத்தகைய முயற்சியை எடுக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன். செய்யவில்லை. ஆயினும் பள்ளியின் முதல் மாணவன். இதுபோல் எத்தனையோ முறைகள் இலட்சியங்களை வளர்த்து அவற்றை தெரிந்தே தவற விட்டிருக்கிறேன்.

இதற்கு எனது அவநம்பிக்கையும் அதனால் விளையும் தயக்கம், சோம்பேறித்தனம், செயல்களை ஒத்திப்போடும் மனப்பாங்கு போன்றவை தான் காரணம் என உணர்ந்தே இருக்கிறேன். இவை எனது குடும்பச் சொத்தாகும். எனவே இந்த உணர்வுகளை வென்றால்தான் என்னால் சாதிக்கமுடியும். இந்தமுறை வென்றுவிடுவேன் என உறுதியாக நம்புகிறேன். அதற்கு முக்கியமான காரணம் ஜெயமோகன். அவரது எழுத்துக்கள் என்னுள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அவரது நண்பர்களில் ஒருவனாகும் பாக்கியம் பெற்றதால் அவரை அருகிருந்து அறியும் பேறும் பெற்றிருக்கிறேன். அவரே இன்றிலிருந்து ஒரு பெரிய செயலில் இறங்கியிருக்கிறார். எனது நல்லூழ், அந்த செயலும் 10 ஆண்டுகள் தொடரப்போகிறது. எனது தேடல்கள், கேள்விகளுக்கு அவரது இந்த முயற்சியின் வழியாக பதில்களைக் கண்டடைவேன் என நம்புகிறேன். எனவே, எனது குருவைப் பற்றிக்கொண்டு இந்தப் பத்தாண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துவிடுவேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

செவ்வாய், 2 ஜூலை, 2013

ஏற்காடு இலக்கிய முகாம்

ஜெ-வின் வழிகாட்டுதலில் நடைபெறும் ஊட்டி இலக்கியச் சந்திப்புகளில் 2010 சந்திப்பிற்குப் பிறகு நான் கலந்துகொள்ளும் இரண்டாவது சந்திப்பு இது; இம்முறை ஏற்காட்டில். கடந்த இரண்டு சந்திப்புகளில் சில தனிப்பட்ட காரணங்களால் கலந்துகொள்ள முடியாமல் விடுபட்டுப்போய்விட்டதால் இம்முறை சற்று கூடுதல் ஆர்வத்துடனிருந்தேன். மறைந்த காஞ்சிபுரம் வெ. நாராயணன்அவர்கள் நடத்திவந்த இலக்கியவட்டக்கூட்டங்களில் தொண்ணூறுகளில் இறுதிகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டிருக்கிறேன். இரண்டு சிறப்பான ஆளுமைகளால் முன்னெடுக்கப்படும் சந்திப்புகள் என்ற பொதுமையைத் தவிர அமைப்பு முறையிலும், நெறிமுறைகளிலும் இரண்டும் முற்றிலும் வெவ்வேறான இலக்கியச் சந்திப்புகள். ஆனால், இரண்டுமே எனக்கு ஆர்வமூட்டுபவை. இயல்பிலேயே கூச்ச உணர்வும், தயக்க சுபாவமும் கொண்டவனாதலால், நான் எப்போதுமே தீவிரப் பங்களிப்பானாக இருந்ததில்லை. ஆயினும், இத்தகைய சந்திப்புகளை கூடியமட்டும் தவிர்க்கமாட்டேன்.

கடந்த 27 இரவு சென்னையிலிருந்து ஏற்காடு விரைவுவண்டியில் நான், சங்கீதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாசன் - சுதா, ஜாஜா @ ராஜகோபாலன் ஆகிய ஐவரும் புறப்பட்டோம். பின்னர் வேறு சில நண்பர்களும் இணைந்துகொண்டனர். காலை 8மணியளவில் சந்திப்பு நடைபெற்ற செட்டியார் பங்களாவை வந்தடைந்தோம். 9.30க்கு முதல் அமர்வு- கம்பராமாயணம் ஆரண்யகாண்டம் தொடங்கியது. நாஞ்சில் கனடா பயண ஜெட் லாக்கிலிருந்து மீண்டிருக்கவில்லை. அதனால் நிகழ்வு சற்று தொய்வாக இருந்தது. ஆகையால், உணவு இடைவேளைக்குப் பிறகு நிகழ்வுகள் மாற்றியமைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உலகச் சிறுகதைகள் விமரிசிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப்பின் (அறம் வரிசைக் கதைகளுக்குப் பின்) இந்நிகழ்வுகளுக்காகவே சிறுகதைகளை வாசித்து வந்திருந்தேன். நண்பர்கள் மிக அருமையாக விமரிசனமும், விவாதமும் புரிந்தனர். நான் பொறாமையுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். மாலையில் பகோடா பாயிண்ட் வரை ஒரு சிறு உலா போய்வந்தோம். அதன்பின் மீண்டும் விட்ட இடத்திலிருந்து நிகழ்வுகள் தொடங்கின. இரவில் இசைக்கச்சேரி; நண்பர்கள் சுரேஷும், சங்கீதாவும் அனைவரையும் மகிழ்வித்தனர்.

இரண்டாம் நாள் மீண்டும் கம்பராமாயணம். நாஞ்சில் புத்துணர்வுடன் தொடங்கினார்; பின்னர் ஜடாயு வழக்கமான உற்சாகத்துடன் பட்டாசாக வெடித்தார். மதியம் நண்பர்கள் தேர்ந்தெடுத்த இந்தியச் சிறுகதைகளும், கவிதைகளும் விவாதிக்கப்பட்டன. இரவில் தீப்பிழம்பின் ஒளியில் மீண்டும் இசைக்கச்சேரி. ராம் சேர்ந்துகொண்டதால் கூடுதல் உற்சாகம். தூக்க மிகுதியால் 12 மணியளவில் படுக்கச் சென்றுவிட்டேன். நண்பர்கள் காலை 4:00 மணிவரை கொண்டாடி மகிழ்ந்தனர். மூன்றாம் நாள் பேராசிரியர் ஞானசம்பந்தம் வில்லிபுத்தூராரின் பாரதம் குறித்து அவரது டிரேட் மார்க் ஜோக்குகளோடு உரையாற்றினார். மதிய உணவோடு சந்திப்பு முற்றுப்பெற்றது.



இந்தச் சந்திப்பிற்காக நண்பர்கள் மிகுந்த தயாரிப்புகளோடு வந்திருந்தனர். மூன்று நாட்களும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்குப் 10-12 மணி நேரங்கள் தீவிரமான விவாதங்கள் ஊடாக நிகழ்வுகள் நடந்தன. சோர்வோ, சலிப்போ இல்லாமல் எல்லோரும் தீவிர கவனத்துடன் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டனர். மாணவனாக, கல்வியாளனாக கிட்டத்தட்ட 25 வருடங்களாக பல பெரும் கருத்தரங்கங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். அவைகளோடு ஜெ முன்னெடுக்கும் இத்தகைய நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்கமுடிவதில்லை. கடமைக்காகவும், லெளகீக பயன்களுக்காகவும் கல்வி, ஆராய்ச்சி புலங்களால் நல்கைகளைப் பெற்றுக்கொண்டு, பெரும் விளம்பரத்துடன் நடத்தப்பெறும் ஆராய்ச்சி கருத்தரங்கங்கள் எனக்கு ஒவ்வாமையைத் தருவன. முடிந்தவரை அவைகளைத் தவிர்க்கவே முயல்வேன், எனக்கு அதனால் லெளகீகப் பயன்கள் இருந்தபோதிலும். ஆனால் இது அப்படியல்ல; சென்ற இரண்டு முறைகள் ஊட்டி கூட்டங்களைத் தவறவிட்டதே எனக்கு பெரும் சோகம் அளித்தது.

யோசித்துப் பார்த்தேன்; நான் எப்போதுமே தீவிரப் பங்களிப்பாளானாக இருந்ததில்லை, எனினும் எது என்னை இத்தைகய நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்துகொள்ள வைக்கிறது- இதன் ஆத்மார்த்தந்தான். இதில் அமைப்பாளர்- பங்கேற்பாளர் என்ற மேல்-கீழ் நிலைகள் இல்லை. ஜெ உட்பட அனைவரும் ஒன்றாக உண்டு, உறங்கி விவாதித்து, ஒரு குடும்பமாக உணரும் அனுபவத்தை வார்த்தைகளால் விளக்கமுடியாது. ஆயினும் கறாரான விதிமுறைகளுண்டு. அதனால்தான் இத்தகைய நிகழ்வுகளை சிறப்பாக நடத்தமுடிகிறது. இல்லையெனின் இதுவும் ஒரு வெட்டி அரட்டைக் கூட்டமாகிவிடும்.

மூன்று நாட்களும் உணவு உபசரிப்பும் அருமை. விடையளிக்கும்போது இக்கூட்டத்தை அற்புதமாக ஒருங்கிணைத்து நடத்திய விஜயராகவன் தேம்பி அழுதேவிட்டார். மாலை தனாவின் காரில் சேலம் வந்தடைந்தோம். ரயிலில் சென்னை திரும்பும்போதுதான் நான் கடந்த மூன்றுநாட்களில் மொத்தமாகப் பேசியதைவிடவும் அதிகமாகப் பேசிக்கொண்டு வந்தேன். ஒரு இலக்கிய சந்திப்பில் முதன்முறையாக கலந்துகொண்ட சங்கீதாவின் கேள்விகளுக்கு பதில்சொல்லும்போதுதான் எனக்கும், ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் ஜெ என்ற ஆளுமைமேல் இருக்கும் பிரியமும், மரியாதையும் வெளிப்பட்டன. ஜெ அடிமையாகவே ஸ்ரீனிவாசன் மாறிவிட்டார் என சுதா குறிப்பிட்டார். வீட்டில் பவானியிடம் சந்திப்பு குறித்து விளக்கும்போது அடுத்தமுறை நானும் கலந்துகொள்ள முயல்கிறேன் என்றார். பெரிய மகன் அமுதனிடம் நேற்று நிகழ்வில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தேன். அவனையும் சென்ற மே மாதம் பாண்டிச்சேரியில் நடந்த சுனில் கிருஷ்ணனின் திருமணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தோம். அதனால் நண்பர்களை புகைப்படங்கள் வழி அடையாளம் கண்டுகொண்டிருந்தான். ஜெ படம் வந்தபோது, அப்பா இவரும் உன் பிரெண்ட் தானே எனக் கேட்டான். பிரெண்ட்தான், ஆனால் அதற்கும் மேலே - வழிகாட்டி... குரு என்றேன்





வியாழன், 20 டிசம்பர், 2012

விஷ்ணுபுரம் விருது - 2012

நாளை மறுநாள் (22/12/2012) மாலை ஆறு மணிக்கு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இவ்விருது படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலில் ஆ. மாதவனுக்கும், 2011-ல் பூமணிக்கும் விருது வழங்கப்பட்டது. ஜெயமோகன் மீது பற்றும், மதிப்பும் கொண்ட நண்பர்களால் நடத்தப்படுகிறது இவ்விழா. இந்தமுறை விருது வழங்க இளையராஜா வருகிறார் என்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. இன்று மாலை கோவை கிளம்புகிறேன். நாளை தங்கை வீட்டில் தங்கிவிட்டு சனியன்று மதியம் விழா அரங்கத்திற்குச் செல்லலாம் என் இருகிறேன். நண்பர்கள் பலரை நீண்டநாள் கழித்து சந்திக்கப்போகிறேன் என்பதால் உள்ளம் மகிழ்ச்சியாய் இருக்கிறது. சுனில் கிருஷ்ணன் போன்ற சில நண்பர்களை முதன்முறை நேரில் காணப்போகிறேன். சென்றமுறை கோவையில் இருந்தும், தங்கையின் குழந்தை -கோமதி இறந்துவிட்டதால், விருது நிகழ்ச்சிக்குச் செல்லமுடியாமல் போய்விட்டது. 


விழா அழைப்பிதழ்




வெள்ளி, 27 மே, 2011

கொல்கத்தா, சிக்கிம்

கடந்த 13 ம் தேதி மாலை சென்னையிலிருந்து கிளம்பி கொல்கத்தா வழியாக சிக்கிம், பூட்டான் செல்வதாக ஏற்பாடு. மதியம் வீட்டிலிருந்து கைபேசி அழைப்பு. அமுதன் மாடிப்படியிலிருந்து உருண்டு விழுந்து நெற்றியில் பலத்த அடி என்று தங்கை சொன்னாள். வீட்டிற்குச் சென்று அவனையும், துணைக்கு மாமியாரையும் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனை சென்று புருவத்திற்கு மேல் எற்பட்டிருந்த வெட்டுக்காயத்திற்கு நான்கு தையல்கள் போட்டுவிட்டு கிளம்பும்போது மனைவியும் வந்துவிட்டிருந்தார். பின்னர் மீண்டும் அலுவலகம் வந்து மாலை வீடு திரும்பி விமான நிலையத்திற்கு கிளம்பும் போது மணி 4.30 ஆகி விட்டிருந்தது. மனைவி என்னை வண்டியில் வந்து விமான நிலையத்தில் வந்து விட்டுவிடுவதாக சொல்லியிருந்ததால் சற்று ஆறுதல். Å¢Á¡É ¿¢¨ÄÂõ ¦ºýÚ §º÷žüÌû ¦ƒÂ§Á¡¸Ûõ, «Ãí¸º¡Á¢Ôõ ¦¾¡¼÷óÐ ¨¸ô§Àº¢Â¢ø «¨Æò¾¡÷¸û. நான் வண்டி ஓட்டிக் கொண்டிருந்ததால் மனைவியிடம் கைப்பேசியைக் கொடுத்துவிட்டேன். ¿¡ý «íÌ ¦ºýÚ §º÷ó¾§À¡Ð «¨ÉÅÕõ Å¢Á¡Éõ ²È ¬Ôò¾Á¡¸¢Â¢Õó¾¡÷¸û.

¦¸¡ø¸ò¾¡Å¢ø ¿¡í¸û ¾í¸Å¢Õó¾ §†¡ð¼ÖìÌî ¦ºøÄ ¼¡ìº¢ ¸¢¨¼ì¸ §¿ÃÁ¡ÉÐ. Áõ¾¡Å¢ý ¦ÅüÈ¢ ¸¡Ã½Á¡¸ ʨÃÅ÷¸û Àóò ±ýÚ Â¡§Ã¡ ¦º¡ýÉ¡÷¸û. þÃ×½× ¿¡í¸û¾í¸¢Â¢Õó¾ †×á º¢Åõ §†¡ð¼Ä¢ø. þÃ׽ŢüÌ þùÅÇ× ¦ºÄ× ¦ºö¾¡ø §À¡ñÊ¡¸¢Å¢Î§Å¡õ ±ýÀ¾¡ø ÁÚ¿¡û ¸¡¨ÄÔ½× †×áŢý º¡ì¸¨¼ò ¦¾Õ§Å¡Ã ¸¨¼Â¢ø ¸î§º¡Ã¢Ôõ, ÃºÌøÄ¡×õ. ¿ýÈ¡¸§Å¢Õó¾Ð; À½Óõ ÀòÐ Á¼íÌ ¸õÁ¢. ¦ºý¨É¢¦ÄýÈ¡ø þõÁ¡¾¢Ã¢ì ¸¨¼¸Ç¢ø º¡ôÀ¢ÎŨ¾ «Ú¦ÅÚô§Àý. ÍüÚÄ¡ ÁÉ¿¢¨Ä «ó¿¢¨Éô¨À§Â þøÄ¡Áġ츢ÂÐ. ¸¨¼ìÌ ±¾¢§Ã ÁÃò¾Ê¢ø ´ÕÅÕìÌ Ó¸îºÅÃõ ¿¼óЦ¸¡ñÊÕó¾Ð. ¾Á¢ú¿¡ðÊý ¸¢Ã¡Áí¸Ç¢ø ܼ þô§À¡Ð þ측𺢨Âì ¸¡½ÓÊ¡Ð. À¢ýÉ÷ þÃñÎ ¼¡ìº¢¸û À¢ÊòÐ §Àæ÷ Á¼õ, ¾ðº¢§½ŠÅÃõ ¦ºý§È¡õ. ஹூக்ளி நதியில் நீராடினோம். ¦¸¡ø¸ò¾¡Å¢ø ¦Å¢Öõ, Å¢Â÷¨ÅÔõ ¦ºý¨É¨Â Å¢¼ «¾¢¸Á¡¸¢Â¢Õó¾Ð. 1994 ல் ¸øæÃ¢Â¢Ä¢ÕóÐ «¸¢Ä þó¾¢Â ÍüÚÄ¡ ¦ºýȧÀ¡Ð ´ÕÓ¨È ¦¸¡ø¸ò¾¡ Åó¾¢Õ츢§Èý. அப்போது பார்த்த அதே கொல்கத்தா, பெரிய மாற்றமில்லை. «Øì¸¡É º¢¾¢ÄÁ¼ó¾ ¸ðʼí¸û.

மாலையில் எஸ்பளனேடு பஸ் நிலையத்திலிலிருந்து சில பல குழப்பங்களுக்குப் பின் சிலிகுரி செல்லும் பேருந்தில் ஏறினோம். கொல்கத்தா அனுபவங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை பெளதீகமாக உணர்த்திÉ. சிலிகுரியில் அரங்கசாமியின் நண்பரின் நண்பர் திருவாளர் ஜாய் வந்திருந்தார். அவரது உதவியால் ஒரு டாட்டா சுமோவில் சிக்கிமின் தலைநகரமான காங்டாக்கிற்கு பயணமானோம். ¦ºøÖõ ÅÆ¢¦ÂíÌõ §¾Â¢¨Äò§¾¡ð¼í¸û. ºÁ¦ÅǢ¢ø §¾Â¢¨Äò §¾¡ð¼í¸¨Ç «ô§À¡Ð¾¡ý À¡÷ò§¾¡õ. ¸¡í¼¡ì¸¢ø §Áñ¼Ã£ý ¦Ãº¢¦¼ýº¢ ±ýÈ Å¢Î¾¢Â¢ø ¿¡í¸û ¾í¸ ²üÀ¡¼¡¸¢Â¢Õó¾Ð. «¨ÈìÌ ãýÚ §À÷ ±ýÈ Å¢¸¢¾ò¾¢ø ãýÚ «¨È¸¨Ç ±ÎòÐ즸¡ñ§¼¡õ. ¸¡í¼¡ì¸¢ø «ôÀÊ ´ýÚõ §Á¡ºÁ¡É ÌǢâø¨Ä. ÌÇ¢òÐ, º¡ôÀ¢ðÎ º¢Ä Á½¢òÐÇ¢¸û µö× ±ÎòÐÅ¢ðÎ ¸¡í¼¡ì¨¸ ÍõÁ¡ ´Õ ÍüÚ ÍüÈ¢ ÅÃÄ¡õ ±Éì ¸¢ÇõÀ¢§É¡õ. Ţξ¢Â¢Ä¢ÕóÐ ºüÚ ¦¾¡¨ÄÅ¢ÖûÇ Á¸¡òÁ¡ ¸¡ó¾¢ Á¡÷ì ±ýÈ þ¼ò¾¢üÌ ¦ºýÚ ÅÃÄ¡õ ±É Ţξ¢ §ÁÄ¡Ç÷ ¦º¡ýÉ¡÷. «¾üÌ ÅñÊ À¢ÊòÐò ¾Õ¸¢§Èý §À÷ÅÆ¢ ±ýÚ §¿Ãò¨¾ì ¸¼ò¾¢É¡÷. ¿¼ì¸ ÓÊ¡Р±ýÚ ¦º¡ýɾ¡ø Åñʸû ÅÕõŨà ¸¡ò¾¢Õ󧾡õ. «¾üÌû þÕð¼ ¬ÃõÀ¢òÐÅ¢ð¼Ð. சிக்கிம் ºð¼º¨À ÅÇ¡¸õ «Õ§¸ Ũà ÅñÊ¢ø ¦ºýÚ, º¢È¢Ð ¯Ä¡Å¢Å¢ðÎ ¿¼ó§¾ விடுதிக்குத் ¾¢ÕõÀ¢§É¡õ. ÅÕõÅÆ¢Â¢ø ´Õ ÌÕòšáŢø ѨÆóÐ Å½í¸¢§É¡õ. Ţξ¢Â¢ø ¾Á¢Æ÷ ÌÎõÀõ ´ý¨È ºó¾¢ò§¾¡õ. ¯ñ¨Á¢ø ¿¡í¸û ¦ºýÈ ±øÄ¡ þ¼í¸Ç¢Öõ ´Õ ¾Á¢Æ¨Ãî ºó¾¢ò§¾¡õ. ¾Á¢ÆÛìÌ ÍüÚøÄ¡Å¢ø Å¢ÕôÀÁ¢ø¨Ä ±ýÈ ±ñ½õ ¾ÅÚ ±ýÚ ¯½÷ó§¾ý.

ãýÈ¡õ ¿¡û ¸¡¨Ä 6 Á½¢ìÌ ¸¢ÇõÀ¢ Ôõ¾¡í ÀûÇò¾¡ìÌ ¦ºøÅ¾¡¸ ²üÀ¡Î. ¸¡í¼¡ì¸¢ø ÁÉ¢¾÷¸û §Å¨Ä ¦ºöÔõ §Å¸ò¨¾ À¡÷òÐ ¿¢îºÂÁ¡¸ ¿õÁ¡ø ¬Ú Á½¢ìÌ ¸¢ÇõÀ ÓÊ¡Р±É ¿¢¨Éò§¾¡õ. ¬É¡ø ¬îºÃ¢ÂÁ¡¸ ±í¸¨Ç ²üÈ¢î ¦ºøÄ ¦º¡ÌÍ ÅñÊ ÅóÐÅ¢ðÊÕó¾Ð. µðο÷ ÝÈ «üÒ¾Á¡É ¿À÷.
மேலும்...


சனி, 12 பிப்ரவரி, 2011

காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ. நாராயணன்


ஜெயமோகனின் சோற்றுக் கணக்கு சிறுகதை படித்தவுடன் எனக்கு நான் தந்தை போன்று மதித்த காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ. நாராயணன் அவர்கள்தான் ஞாபகத்திற்கு வந்தார். அதுகுறித்து நான் ஜெ க்கு எழுதிய கடிதத்திற்கு அவரது பதில் இன்று ஜெயமோகன்.இன் ல் இன்று வந்துள்ளது. அதை கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்கிப் படித்துக் கொள்ளலாம்.

வெ.நாராயணன் -ஒரு கடிதம்

காஞ்சிபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக நடத்தப்படும் வலைப்பூவை இந்த இணைப்பில் படித்துக்கொள்ளலாம்.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

மேகமலை பயணம்- 1

ஜெயமோகனின் பயணக்கட்டுரைகளில் எனக்கு எப்போதுமே தீராக் காதல் உண்டு. சமீபத்திய ஊட்டி இலக்கிய சந்திப்பில் அவருடனான நேரடிப் பரிச்சியம் சற்று அதிகமானதால் அவரது பயணங்களில் நானும் பங்குகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. ஆயினும் அவரது கோதாவரிப் பயணம் எனக்கு தெரியாமல் நடந்துவிட்டதில் எனக்கு பலத்த வருத்தமுண்டு. அப்பயணத்தில் எடுக்கப்பட்ட படங்களை பார்த்து ஒரு பொறாமையில் சிறில் அலெக்சை கூப்பிட்டு செல்லமாகத் திட்டி இருக்கிறேன். எனவே சென்ற வாரம் திருவண்ணாமலையில் ஈரோடு கிருஷ்ணன் ஜெயமோகனுடன் சேர்ந்து மீண்டும் மேகமலை பயணம் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தை சொல்லியபோது இம்முறை தவறவிட்டுவிட எனக்கு மனமில்லை. உடனேயே ஒரு துண்டு போட்டுவிட்டேன். அவரோ தனசேகரிடம் கேட்டு சொல்கிறேன் இரண்டுநாள் பொறுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டார். இயல்பாகவே சந்தேகப் பேர்வழியான நான் அரங்கசாமியிடமும் சொல்லிவைத்துவிட்டேன். ஏற்கனவே வருவதாகச் சொல்லியிருந்த சிலர் வராததால் எனக்கு ஒப்புதல் கிட்டியது.

வெள்ளியன்று மாலை நான் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு என் நான்கு வயது மகன் அமுதன் எனக்கு சம்மதம் அளிக்கவில்லை. நானும் உன்னுடன் வருவேன் என அடம்பிடித்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் மாதிரி மேகமலை என்ற ஊருக்குச் செல்கிறேன், நீ பெரியவனானதும் உன்னையும் அப்பா கூட்டிச்செல்கிறேன் எனச் சொல்லியிருந்தேன். நான் கிளம்பும்போது முன்பு நான் சொல்லியது அவனுக்கு திடீரென்று ஞாபகம் வர ஒரே அழுகை. நானும் பெரியவனாயிட்டேன் என்னையும் கூட்டிக்கிட்டுப்போ என்றான். என் பையை தூக்கிவைத்துக்கொண்டு தரமாட்டேன் என்றான். அப்பா ஆபிஸ் வேலையா போறேன், அம்மா வீட்டில்தான் இருக்கிறார்கள், இன்னும் கொஞ்ச நாள் கழித்து கண்டிப்பாக உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன் என்றேன். ம்ஹும், பையன் எதற்கும் மசிவதாகத் தெரியவில்லை. சனிக்கிழமை அவனது பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே அதற்கு நீ கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்றேன். அதற்கும் அழுகை. அவன் பிறந்ததிலிருந்து எடுக்கப்பட்ட அவனுடைய புகைப்படங்களை ஸ்லைடு ஷோவாக டிவியில் போட்டவுடன் சற்று சமாதானமாகி ஒருவழியாக டாட்டா காட்டினான். பின்னர் தன்னுடைய அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்த என்மனைவியை அப்படியே என்னை போரூர் சிக்னலில் வண்டியில் விட்டுவிடச் சொன்னேன். அவர் என்னை அங்கு விடும்போது மணி மாலை 7.15. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்கு 8.30 க்கு வந்துவிடுவேன் என்று நண்பர்களுக்குச் சொல்லியிருந்தேன். ஆற்காடு சாலையின் டிராபிக்கினால் என்னால் அதற்குள் அங்கு சென்று சேர்ந்துவிடமுடியமா என்ற பயம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக இரண்டு சேர் ஆட்டோக்களைப் பிடித்து அங்கு சென்று சேர்ந்தபோது மணி 8.20 தான் ஆகியிருந்தது. கைபேசியில் பிலடெல்பியா அரவிந்தை அழைத்தேன், ஆட்டோவில் வந்து கொண்டிருப்பதாகவும் 2 நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொன்னார். கே.பி. வினோத்தும் அருகிலேயே இருப்பதாகவும் 2 நிமிடங்களில் வந்துவிடுவதாகவும் சொன்னார்.

நான், வினோத், அரவிந்தன் மூவரும் தனசேகரின் ஏற்பாட்டின்படி கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்து ஒன்றில் சின்னமனூருக்குப் புறப்பட்டோம். நானும் அரவிந்தனும் ஜெயமோகனின் வாசக/நண்பர்களான கதையை பகிர்ந்துகொண்டோம். கிட்டத்தட்ட இருவருக்குமே ஜெயமோகனை அணுகுவதில் ஆரம்பத்தில் இருந்த தயக்கம் ஒரேமாதிரியிருந்திருக்கிறது. இருவருமே ஒருவகையில் சுந்தர ராமசாமியின் மூலமே அவரை அடைந்தோம். வண்டியை ஒருவழியாக 10 மணிக்கு கிளப்பினார்கள். தனசேகருக்கு, கே.பி. வினோத் நாங்கள் கிளம்பிவிட்டிருந்த செய்தியை கைபேசியில் தெரிவித்தார். அவரும், ஜெயும் ரயிலில் வந்துகொண்டிருந்தார்கள். பேருந்தில் திரைப்படம் போடுவதற்கான முஸ்தீபுகள் தெரிந்தது. ஜெயமோகனின் ராசியில் ஏதாவது சிம்பு படத்தை போட்டுத்தொலைத்துவிடப் போகிறார்கள் என்று பயந்தோம். நல்லவேளை கடலோரக் கவிதை படத்தில் வரும் இளையராஜா பாடல் ஒன்று ஒளிபரப்பினார்கள். அப்பாடா என்று நினைக்கையில் திடீரென்று வேறு ஒரு படம் தோன்றத் தொடங்கியது. சத்யராஜ், சுந்தர் சி நடித்த குருசிஷ்யன் படம் ஆரம்பித்தது. இதற்கு சிம்பு படமே தேவலாம் போல. எப்படித்தான் இப்படி படம் எடுக்குராய்ங்கன்னு தெரியல.

வழக்கமான பேருந்துப் பயண தூக்கத்திற்குப் பின் காலையில் கண்விழித்தபோது வண்டி திண்டுக்கல்லை தாண்டிக்கொண்டிருந்தது. பின்னர் வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி வழியாக காலை எட்டு மணிக்கு சின்னமனுரை அடைந்தது. கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகள் எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்த பகுதிகள். 13 வருடங்கள் சிறுவயதில் மதுரையில் இருந்தபோதும் ஒருமுறை கூட அப்பகுதிகளுக்கு சென்றதில்லை. நெல்லையில் கல்லூரியில் படிக்கும்போது இரண்டுமுறை இங்கு வந்துள்ளேன். ஆனால் தங்கியதில்லை. சின்னமனூரின் கடைத்தெரு கட்டிடங்கள் 30 வருடங்களுக்கு முந்திய ஒரு வரலாற்றுணர்வை ஏற்படுத்தின. சற்று பரவசமாயிருந்தது. தமிழகத்தின் சிறு நகரங்கள் என்னை எப்போதுமே ஈர்த்து வந்திருக்கின்றன.

பஸ்ஸைவிட்டு இறங்கியதும் வினோத் ஒரு தேநீர் அருந்தலாம் என்றார். சேட்டன்களுக்கு சாயாவின் மேல் எப்பொழுதுமே பிரியம் அதிகம் போல. கைபேசியில் அழைத்த போது, லாட்ஜ் அருகிலேயே இருப்பதாக கிருஷ்ணன் சொன்னார். அறையை அடைந்தபோது எல்லோரும் வந்துவிட்டிருந்தார்கள். ஜெவும், ஜெர்மனி செந்திலும் தூங்கிக் கொண்டிர்ந்தார்கள். கிருஷ்ணனுடன் அவரது நண்பர் லண்டன் சங்கரும் வந்திருந்தார். ஒரு மினி அரட்டை கச்சேரி நடந்தேறியது. பின்னர் ஜெயும் அதில் கலந்துகொண்டார். தனசேகர் அவரது மச்சானுடன் வந்தார். காலைக் கடன்களை முடித்து லட்சுமி லஞ்சு ஹோம் சென்று டிபன் சாப்பிட்டோம். அங்கிருந்து குவாலிஸ் காரில் சின்ன சுருளி அருவிக்கு சென்றோம்.




அருவிக்கு செல்லும் பாதையின் ஏற்ற இறக்கங்களாலும், லட்சுமி லஞ்சு ஹோமின் உபயத்தாலும் பலருக்கும் குமட்டிக்கொண்டு வந்தது. ஒருவழியாக அருவியைச் சென்று சேர்ந்தோம். அங்கு சொற்ப நபர்களே இருந்ததால் நீண்ட நாட்களுக்குப் பின் அருமையான அருவிக் குளியல் கிடைத்தது. கிருஷ்ணன் சளி பிடிக்கும் என்று அருவியில் குளிக்கவில்லை. அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்று சொன்னாலும் கேட்கவில்லை. வக்கீலை கன்வின்ஸ் செய்வது எளிதான காரியம் அல்லவே. அதுவும் கிருஷ்ணன் போன்றவர்களை கன்வின்ஸ் செய்வது நெம்பக் கஷ்டம். பின்னர் அங்கிருந்து தனசேகர் பங்காளிகளின் பண்ணைக்குச் சென்று விருந்து சாப்பிட்டோம். ஒரு குட்டித் தூக்கத்தை போட்டுவிட்டு மீண்டும் சின்னமனூர்.
அறையைக் காலிசெய்துவிட்டு மாலை 6 மணிக்கு மேகமலை பயணம் தொடங்கினோம்.

தொடரும்...

வியாழன், 1 ஏப்ரல், 2010

சான்று சார்ந்த மருத்துவம் சாத்தியமா?!

பொதுவாக மருத்துவப் படிப்பை அறிவியலாகவும் மருத்துவத் தொழிலை கலையாகவும் சொல்வர் (Medicine is a Science to learn but Art to practice). இதன் பொருள் ஒரு மருத்துவன் தான் படித்ததையெல்லாம் நடைமுறையில் பயன்படுத்த முடியாது. வேறுவகையில் சொல்வதானால் வெறும் தருக்கம் மூலம் பெறப்பட்ட அறிவுடன் சற்று உணர்வுகளை கலந்து மருத்துவம் புரிபவனே சிறந்த மருத்துவன் என்பதாகும். ஏனெனில் மருத்துவ அறிவியலில் இன்னும் பல நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன. இயற்பியல், வேதியல் போன்று உயிரியலையும், மருத்துவத்தையும் கறாரான தருக்கம் மூலம் அணுக முடியாது.

ஆனால் இப்போதெல்லாம் சான்று சார்ந்த மருத்துவம் (Evidence based medicine) என்ற முறை மேலை நாடுகளில் அதிகம் புழக்கத்திற்கு வந்துகொண்டுள்ளது. இம்முறையில் புள்ளியியல் சான்றுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஏற்கனவே புள்ளியியல் முறைகள் மருத்துவ துறையில் அதிகம் பயன்பாட்டிலுள்ளது என்றாலும், இப்புதியமுறை மருத்துவம் புரிவதிலுள்ள கலையம்சத்தை அறவே நீக்கிவிட்டு அதில் புள்ளியியல் சான்றுகளை பதிலீடு செய்கிறது. புள்ளியியலும், அதன் உள்ளடங்கிய நிகழ்தகவு முறையும் நமக்கு பல விசயங்களை அறிவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதைமட்டுமே கொண்டு மருத்துவம் புரிவதால் சில நேரங்களில் மருத்துவர் செய்யும் தவறுகளை ஜெயமோகனின் இக்கட்டுரை உணர்த்துகிறது.

இதில் அவரது மகனுக்கு (கெட்டுப்போன) லஸ்ஸி சாப்பிட்டதால் ஏற்பட்ட உணவு அழற்சிக்கு கொடுக்கப்பட்ட எதிர் மருந்துகள் மேலும் நோயைத் தீவிரப்படுத்தியதே தவிர குறைக்கவில்லை. தருக்க அறிவியல் முறை மூலம் சிந்தித்த மருத்துவர்கள் மேலும் மேலும் வேறு மருந்துகளை அளித்து எப்படியாவது நோயைக் கட்டுப்படுத்த முயன்றார்களே தவிர வேறுவிதமாக யோசிக்கவில்லை. அவர்களது தருக்க அறிவு அவர்களை அதைத்தாண்டி சிந்திக்க விடவில்லை. அம்மருத்துவர்களின் தந்தையோ ஒரு நாய் திருடன் போனபின்பும் குரைப்பதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டு ஒருவேளை இந்நோய் முறிவு மருந்துகளும் நோய்க்குக் காரணமான கிருமிகள் அழிந்தபின்பும் தொடந்து உடலைத் தூண்டுவதால் உடலானது எதிவினை புரிகிறது என்பதை குறிப்பால் உணர்ந்து அம்மருந்துகளை உடனடியாக நிறுத்தியதால் பின்னர் நோய் குனமானதாக எழுதியிருப்பார். இது மருத்துவம் செய்வதிலுள்ள கலையம்சத்தை (உள்ளுணர்வை) உணர்த்துகிறது. தருக்க அறிவியலின் நிகழ்தகவுக் கோட்பாடு இதனை ஒரு அரிதாக நடக்கும் நிகழ்வாக சொல்லும் (very rare probability), ஆயினும் எனக்கு தற்போதெல்லாம் உயிரியல் துறையில் தருக்க அறிவியலின் ஆதிக்கம் குறித்தது சற்று எதிர்மறை எண்ணம் தோன்றியுள்ளதால் இதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் முன்பு எழுதிய சித்த மருத்துவமும் நவீன அறிவியலும் என்ற கட்டுரைத் தொகுதிகளில் ஒன்றில் சான்று சார்ந்த மருத்துவத்தை சற்று சிலாகித்து எழுதியிருப்பேன். இந்த இரு வருடங்களுக்குள் என்னில் இந்த மாற்றம்.